செய்திகள்
விபத்து பலி

வேலூர் அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி

Published On 2021-08-24 15:47 GMT   |   Update On 2021-08-24 15:47 GMT
வேலூர் அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நேற்று அதிகாலை வாகனம் மோதி இறந்து கிடந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்று போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி மஞ்சள் நிற சேலை அணிந்திருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து இறந்த மூதாட்டி யார், எந்த பகுதியை சேர்ந்தவர்? அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News