செய்திகள்
கொள்ளை

சிவகங்கை அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

Published On 2021-08-21 21:43 IST   |   Update On 2021-08-21 21:43:00 IST
சிவகங்கை அருகே பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை:

சிவகங்கை வண்டவாசி ரோடு அன்னை நகரை சேர்ந்தவர் சொர்ண காளை (வயது45). இவரது மனைவி கன்னி முத்து (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சொர்ணகாளை கோயமுத்தூரில் பேக்கரியில் வேலை செய்கிறார். சம்பவத் தன்று கன்னிமுத்து காலையில் வீட்டை பூட்டி வயலுக்கு சென்று விட்டார். மகன்கள் வெளியே சென்று விட்டனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன்புற கதவை உடைத்து வீட்டில் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை வெள்ளி கொலுசு மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவைகளை திருடி சென்று விட்டனர். இதுதொடர்பாக சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News