செய்திகள்
தற்கொலை

ஊட்டி அருகே கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை

Published On 2021-08-20 18:47 IST   |   Update On 2021-08-20 18:47:00 IST
ஊட்டி அருகே கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:

ஊட்டியில் மான் பூங்கா சாலை அருகே உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக நகர மேற்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, அந்த பிணத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் 25 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் கயிறு கட்டி இறங்கி பிணத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக மிதந்தது ஊட்டி முள்ளிக்கொரை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான பிரபு(வயது 43) என்பது தெரியவந்தது. ஆனால் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் கிணற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News