செய்திகள்
கைது

சுரண்டையில் பெண்ணிடம் தகராறு செய்த டிரைவர் கைது

Published On 2021-08-19 10:19 GMT   |   Update On 2021-08-19 10:19 GMT
சுரண்டையில் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

சுரண்டையில் உள்ள புதிய காய்கறி மார்க்கெட் அருகே வசிப்பவர் அகஸ்டின் முத்து (வயது24). இவரது மனைவி சுரண்டை பஸ் நிலையம் சாலையில் உள்ள ஒரு கடைக்கு தனது மொபட்டில் சென்றுள்ளார். அங்கு சாலையோரத்தில் மொபட்டை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார்.

திரும்பி வரும் போது மொபட்டின் பின்புறம் ஊத்துமலை பாரதி நகரை சேர்ந்த பிரவின் குமார் என்பவர் தனது ஆட்டோவை நிறுத்தி இருந்தார். இது தொடர்பாக 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரவின் குமார் அந்த பெண்ணை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அகஸ்டின் முத்து சுரண்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரான பிரவின்குமாரை கைது செய்தனர்.
Tags:    

Similar News