செய்திகள்
வாணியம்பாடி அருகே கார் டயர் வெடித்து பைக் மீது மோதல்- 2 பேர் பலி
வாணியம்பாடி அருகே கார் டயர் வெடித்து பைக் மீது மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் தொடர்பாக அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 25). டெய்லர்.
அதே ஊரை சேர்ந்தவர் மணிகண்டன் (30). கட்டிட மேஸ்திரி. இவர்கள் இருவரும் பைக்கில் வாணியம்பாடி நெடுஞ்சாலையில் உள்ள புத்துகோவில் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டி ஓடி மணிகண்டன், ஜெயச்சந்திரன் வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே ஜெயச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது மணிகண்டன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 25). டெய்லர்.
அதே ஊரை சேர்ந்தவர் மணிகண்டன் (30). கட்டிட மேஸ்திரி. இவர்கள் இருவரும் பைக்கில் வாணியம்பாடி நெடுஞ்சாலையில் உள்ள புத்துகோவில் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து வேலூர் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டி ஓடி மணிகண்டன், ஜெயச்சந்திரன் வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே ஜெயச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது மணிகண்டன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.