செய்திகள்
கே.வி.குப்பம் அருகே சாராயம் விற்றவர் கைது
கே.வி.குப்பம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பத்தை அடுத்த மாச்சனூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே ஊரை சேர்ந்த வேல்முருகன் (வயது 45) என்பவர் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டு இருந்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.