செய்திகள்
விபத்து பலி

திருவண்ணாமலை அருகே மொபட்டில் இருந்து விழுந்த வாலிபர் பலி

Published On 2021-08-11 23:56 IST   |   Update On 2021-08-11 23:56:00 IST
திருவண்ணாமலை அருகே மொபட்டில் இருந்து விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே உள்ள பெரியபாளிப்பட்டு புதிய காலனி, மேட்டுதெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 21). இவர் சம்பவத்தன்று அந்தபகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் அவரின் தாயார் சுதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News