செய்திகள்
கோப்புபடம்

வாலாஜா அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-08-11 12:47 GMT   |   Update On 2021-08-11 12:47 GMT
வாலாஜா அருகே மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:

வாலாஜா அடுத்த சென்னசமுத்திரம் புதிய காலனியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 52), கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில் சென்னசமுத்திரம் தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் மரத்தில் மூர்த்தி தூக்கில்பிணமாக தொங்கினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News