செய்திகள்
உஷாமாலினி

வேப்பந்தட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி பலி

Published On 2021-08-11 09:53 GMT   |   Update On 2021-08-11 09:53 GMT
வேப்பந்தட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள சிறுவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகள் உஷாமாலினி(வயது 17). இவர் அனுக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மேலும் சுப்பிரமணியனுக்கு உதவியாக அவ்வப்போது விவசாய வேலைகளையும் உஷாமாலினி செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வயலுக்கு சென்ற உஷாமாலினி எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த பெற்றோர், உஷாமாலினியை தேடி வயலுக்கு சென்றனர். அங்கு தேடியபோது கிணற்றில் அவர் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உஷாமாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News