செய்திகள்
கைது

ஓச்சேரி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது

Published On 2021-07-28 13:35 GMT   |   Update On 2021-07-28 13:35 GMT
ஓச்சேரி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்:

காவேரிப்பாக்கத்தை அடுத்த அவளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி, மேஷீட் மற்றும் போலீசார் நேற்று மாலை சங்கரன்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஓடையில் சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் டிராக்டர் டிரைவர், மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர், பொக்லைன் டிரைவர் ஆகியோர் ஓட்டம் பிடித்தனர். அவர்களில் பொக்லைன் டிரைவர் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த துளசி (வயது 22) என்பவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

தப்பி ஓடிய டிராக்டர் டிரைவர் சங்கரன்பாடி பகுதியைச் சேர்ந்த சுந்தர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சிவா ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News