செய்திகள்
கைது

ரத்தினகிரி அருகே மணல் கடத்திய வாலிபர் கைது

Published On 2021-07-21 16:17 GMT   |   Update On 2021-07-21 16:17 GMT
ரத்தினகிரி அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலாற்றுப் படுகையில் மணல் கடத்துவதாக ரத்தினகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பாலாற்றுப் படுகையில் இருந்து மணலை மூட்டைகளாக கட்டிக்கொண்டு நந்தியாலம் டாஸ்மாக் கடை எதிரே வேனில் அடுக்கி வைத்து கொண்டு இருந்தனர்.

இதனைக் கண்ட போலீசார் மணல் மூட்டை மற்றும் வேனை பறிமுதல் செய்தனர். மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த வேன் டிரைவர் பார்த்திபன் (வயது 21) என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News