செய்திகள்
கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர்கள் கைது

Published On 2021-07-14 09:27 GMT   |   Update On 2021-07-14 09:27 GMT
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் சிவசங்கர் (வயது 15) .  அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவனது நண்பன் டிராவிட் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி சிவசங்கர் படிக்கும் அதே பள்ளியில் படித்து வருகிறார்.  அந்த சிறுமியை சிவசங்கர் பல மாதங்களாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இதற்கு அந்த சிறுமி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். 

தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் அந்த சிறுமி சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்தொடர்ந்த சிவசங்கர் அந்த சிறுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிவசங்கர் அன்றிரவு தனது நண்பன் டிராவிட்டுடன் சேர்ந்து சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளனர்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் சுதா சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பொன்அகரம் மாணவர்களை கைது செய்தார்.
Tags:    

Similar News