செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி

Published On 2021-07-13 16:35 IST   |   Update On 2021-07-13 16:35:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 3 பேர் பலியாகினர். புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனால் இறப்பு எண்ணிக்கை அவ்வப்போது அதிகரித்து வருகிறது. அரசு நேற்று வெளியிட்டப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து585 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 38 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து729 ஆக அதிகரித்தது.

இந்த நிலையில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகியினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 346 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 510 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News