செய்திகள்
திருட்டு

புதுக்கோட்டை அருகே கடையில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் திருட்டு

Published On 2021-07-13 11:01 GMT   |   Update On 2021-07-13 11:01 GMT
புதுக்கோட்டை அருகே கடையில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையை சேர்ந்தவர் அருள் கென்னடி (வயது 50). பிளக்ஸ் கடை உரிமையாளரான இவர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தனது கடையில் ரூ.1 லட்சத்து70 ஆயிரத்தை ஊழியர்கள் உமா உள்பட 3 பேர் திருடியதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News