செய்திகள்
தற்கொலை

அய்யன்கொல்லி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2021-07-09 19:21 IST   |   Update On 2021-07-09 19:21:00 IST
அய்யன்கொல்லி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர்:

அய்யன்கொல்லி அருகே உள்ள பாதிரிமூலா பகுதியை சேர்ந்தவர் அருணாசலம்(வயது 63). கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சுல்தான்பத்தேரி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருணாசலம் உயிரிழந்தார். அவரது தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News