செய்திகள்
திருச்சி மத்திய சிறைக்கு மாற்றுவதற்காக கைதிகள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டபோது எடுத்த படம்.

ஜெயங்கொண்டத்தில் இருந்து 35 கைதிகள், திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம்

Published On 2021-07-09 16:44 IST   |   Update On 2021-07-09 16:44:00 IST
ஜெயங்கொண்டம் கிளை சிறையில் இருந்து 35 கைதிகள் திருச்சி மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், விக்கிரமங்கலம், உடையார்பாளையம், தா.பழூர் போன்ற போலீஸ் நிலையங்களின் கட்டுப்பாட்டு பகுதிகளில் சாராயம், மது பாட்டில்கள் விற்பனை போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது கொரோனா தொற்று 2-ம் அலை பரவல் காரணமாகவும், கிளைச் சிறையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தாலும் கைதிகள் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவர்களை திருச்சி மத்திய சிறைக்கு மாற்ற மத்திய சிறை சூப்பிரண்டு செல்வமணி மற்றும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் உத்தரவிட்டனர்.

அதன்படி ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், தலைமை காவலர் மகேஸ்குமார், போலீஸ்காரர் முருகேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 35 கைதிகளை உரிய கொரோனோ பரிசோதனை செய்து, டாக்டரின் ஆலோசனையின்படி திருச்சி மத்திய சிறைக்கு போலீஸ் வேனில் அழைத்துச்சென்றனர்.

Similar News