செய்திகள்
பெரம்பலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்தும், அத்யாவசியமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், பழைய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்தும், அத்யாவசியமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், பழைய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.ஏ.மீரா மொய்தீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் குதரத்துல்லா, பொருளாளர் முகமது இலியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.