செய்திகள்
பெரம்பலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாடபுரம் நடுவீதியை சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 579 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது.
இதே போல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.