செய்திகள்
கைது

செம்மண் கடத்திய 2 பேர் கைது- லாரி பறிமுதல்

Published On 2021-07-05 15:01 IST   |   Update On 2021-07-05 15:01:00 IST
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே செம்மண் கடத்துவதற்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் த.சோழங்குறிச்சி சாலையில் உள்ள சின்ன வட்ட குளம் ஏரியில் செம்மண் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற அவர், டிப்பர் லாரியில் செம்மண் கடத்திய நபர்களை பிடித்து, லாரியுடன் உடையார்பாளையம் போலீசில் ஒப்படைத்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, தத்தனூர்மேலூர் மேல கொட்டாய் தெருவை சேர்ந்த கொளஞ்சியப்பா(வயது 45), ஜெயங்கொண்டத்தை அடுத்த செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த ராமதாஸ்(34) ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செம்மண் கடத்துவதற்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News