செய்திகள்
முககவசம்

கறம்பக்குடியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2021-07-03 16:52 IST   |   Update On 2021-07-03 16:52:00 IST
கறம்பக்குடியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கறம்பக்குடி:

கறம்பக்குடி தாசில்தார் விசுவநாதன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கறம்பக்குடி சீனி கடைமுக்கம் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், கிருமிநாசினி பயன்படுத்தி, முககவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

Similar News