செய்திகள்
அரியலூர் அருகே விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம் திருமானூர் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மணியன் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் உள்ள 45 அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும், விவசாயிகள் உழைத்து உற்பத்தி செய்த உணவு பொருளை கண்டு கொள்ளாமல் இருக்கும் அதிகாரிகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் மகாராஜன், மாவட்ட துணை தலைவர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர் வரப்பிரசாதம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.