செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 109 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் 3 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். தற்போது 1,039 பேர் சிகிச்சையில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 39 ஆயிரத்து 986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 306 ஆக அதிகரித்துள்ளது.