செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கோவனூர், திருக்களம்பூரில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-07-02 17:21 IST   |   Update On 2021-07-02 17:21:00 IST
பொன்னமராவதி ஒன்றியம் கோவனூர் மற்றும் திருக்களம்பூர் ஊராட்சியில் தமிழக அரசின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
பொன்னமராவதி:

பொன்னமராவதி ஒன்றியம் கோவனூர் மற்றும் திருக்களம்பூர் ஊராட்சியில் தமிழக அரசின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கலைவாணி உத்தரவின்பேரில் காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. கோவனூரில் நடைபெற்ற முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் என 84 பேர் கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொண்டனர். இதேபோல் திருக்களம்பூர் ஊராட்சியில் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். இதில் வட்டார மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News