செய்திகள்
கோப்புபடம்

படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2021-07-01 14:02 GMT   |   Update On 2021-07-01 14:02 GMT
படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
படப்பை:

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் சந்தோஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் சோபன்ராஜ், பெயிண்டர். இவருடைய மனைவி தமிழரசி (வயது 34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் கீதா (15), 11-ம் வகுப்பும், ஹரிணி (10), 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கீதா அதிக நேரம் செல்போனை உபயோகித்து வந்தார். இதனை தாய் தமிழரசி கண்டித்தார். இதையடு்த்து கீதா உணவு சாப்பிடாமல் இருந்து விட்டார். இதனை தொடர்ந்து காலை முதல் இருவருக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தமிழரசி சேலையில் தனக்கு தானே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் தற்கொலை செய்து கொண்ட தமிழரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News