செய்திகள்
தற்கொலை

கிருஷ்ணகிரி அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2021-06-30 21:03 IST   |   Update On 2021-06-30 21:03:00 IST
கிருஷ்ணகிரி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை: 

 கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த ஜெ.காருப்பள்ளி ஊராட்சி எச்.செட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 32), கூலித்தொழிலாளி. இவருக்கு  மீனா என்ற மனைவியும், முனிராஜ் (8). நித்தீன் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மீனா அவரது தாயார் கிராமமான கூட்டூருக்கு  சென்று விட்டார். 

 இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட நாகேஷ் குடிபோதையில் நேற்று முன்தினம் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து  கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News