செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி

Published On 2021-06-30 11:23 GMT   |   Update On 2021-06-30 11:23 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகினர். புதிதாக 71 பேருக்கு தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் இறப்பு அவ்வப்போது காணப்படுகிறது. இந்த நிலையில் அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.

இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து900 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 58 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து3 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனாவுக்கு மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News