செய்திகள்
மாயம்

வெம்பாக்கம் அருகே திருமணமான 6 நாட்களில் புதுப்பெண் மாயம்

Published On 2021-06-29 15:49 IST   |   Update On 2021-06-29 15:49:00 IST
திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் அருகே திருமணமான 6 நாட்களில் புதுப்பெண் மாயமானது குறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பாக்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள வடக்கல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு கூலி தொழிலாளி.

இவருக்கும் செய்யார் தாலுகா கீழ்ப்பந்தை கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்பவருக்கும் கடந்த 21.6.2021 அன்று வடக்கல்பாக்கம் கிராமத்தில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது. அதன்பின் தனது மனைவி தனலட்சுமி மாயமாகிவிட்டார் என்று தூசி போலீஸ் நிலையத்தில் பாபு புகார் கொடுத்தார்.

புகார் மீது தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான தனலட்சுமியை தேடி வருகின்றனர். மேலும் திருமணமான 6 நாளில் புதுப்பெண் மாயமாகி விட்டதால் அக்கிராமத்தில் பரபரப்பாக உள்ளது.

Similar News