செய்திகள்
விபத்து பலி

கார் மோதியதில் சாலையில் நடந்து சென்றவர் பலி

Published On 2021-06-28 18:44 IST   |   Update On 2021-06-28 18:44:00 IST
கார் மோதியதில் சாலையில் நடந்து சென்றவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் சம்பவத்தன்று புதுக்கோட்டையில், ஆலங்குடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார், ஆறுமுகம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Similar News