செய்திகள்
வெண்டிலேட்டர் செயல்படாததால் கொரோனா நோயாளி பலி - உறவினர்கள் போராட்டம்

வெண்டிலேட்டர் செயல்படாததால் கொரோனா நோயாளி பலி - உறவினர்கள் போராட்டம்

Published On 2021-06-26 13:26 GMT   |   Update On 2021-06-26 13:26 GMT
கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து மின் தடை இருந்ததால் வெண்டிலேட்டர் செயல்படாததால் கொரோனா நோயாளி பரிதாபமாக இறந்தார். இதனால் அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஒபிலிகாட்டூரை சேர்ந்தவர் பிரபு (வயது 30). விவசாயி. இவர் கொரோனா பாதிப்புடன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 14-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று கொரோனா சிறப்பு வார்டின் கீழ் தளத்தில் மின்சாரம் தடைபட்டது. இதனால் வெண்டிலேட்டரின் பேட்டரி அளவு குறைந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக வெண்டிலேட்டர் அளவு குறைந்ததாக பிரபுவின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் பிரபு மூச்சு விட சிரமப்பட்டார். இதனால் பிரபு தங்கி இருந்த அறையில், மின் இணைப்பு வராததால் அவரை வேறு இடத்திற்கு ஊழியர்கள் அழைத்து சென்றனர். ஆனாலும் அவர் இறந்து விட்டார்.

இந்த நிலையில் மருத்துவமனை அலட்சியத்தால் பிரபு இறந்ததாக அவரது உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை டவுன் போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அசோகனிடம் கேட்டபோது, பிரபுவிற்கு பேட்டரி லெவல் குறைவதற்கு முன்பு வெண்டிலேட்டரை மாற்றிவிட்டோம். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என்றார்
Tags:    

Similar News