செய்திகள்
கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

Published On 2021-06-26 09:37 IST   |   Update On 2021-06-26 09:37:00 IST
கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு அரசு மருத்துவத்துறை மூலம் செலுத்தப்படுகிறது.
மயிலாடுதுறை:

கொரோனா வைரஸ் பரவல் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு அரசு மருத்துவத்துறை மூலம் செலுத்தப்படுகிறது.

அதன்படி மயிலாடுதுறையில் இன்று (சனிக்கிழமை) பெரியார் அரசு மருத்துவமனையிலும், சீர்காழி அரசு மருத்துவமனையிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதேபோல மயிலாடுதுறை ஒன்றியத்தில் காளி, மணல்மேடு, வில்லியநல்லூர், இளந்தோப்பு, முருகமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், திருவிழுந்தூர் ஊராட்சி பல்லவராயன்பேட்டையிலும், ஐவநல்லூர் ஆகிய ஊராட்சியிலும், குத்தாலம் ஒன்றியத்தில் கோனேரிராஜபுரம், நக்கம்பாடி, கிளியனூர், கோமல், தேரழுந்தூர் ஆகிய பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் ஆக்கூர் ஆரம்பப்பள்ளியிலும், சீர்காழி ஒன்றியத்தில் திருவெண்காடு, மங்கைமடம், காத்திருப்பு ஆகிய பகுதிகளிலும், கொள்ளிடம் ஒன்றியத்தில் அரசூர், தொடுவாய், கூழையாறு, பழையாறு ஆகிய பகுதிகளிலும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் போடப்படும். மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரெயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதேபோல கூறைநாடு புனுகீஸ்வரர் சன்னதி திருமண மண்டபத்தில் பொதுமக்களுக்கான தடுப்பூசி முகாம் நடக்கிறது. எனவே இந்த முகாம்களுக்கு பொதுமக்கள் சென்று பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், முகாமிற்கு வரும் பொதுமக்கள் ஆதார் கார்டு எடுத்து வர வேண்டும். 2-வது டோஸ் செலுத்திக்கொள்ள வருபவர்கள் முதல் டோஸ் செலுத்தியதற்கான குறிப்பு சீட்டு மற்றும் ஆதார் கார்டுகளை எடுத்து வர வேண்டும் என்றும் மயிலாடுதுறை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News