செய்திகள்
கோப்புபடம்

காவேரிப்பட்டணம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

Published On 2021-06-24 16:29 GMT   |   Update On 2021-06-24 16:29 GMT
காவேரிப்பட்டணம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணத்தை அடுத்த பாலே குளி அருகே உள்ள சந்தியப்பன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி சந்தியா (வயது 22). இவர்களுக்கு 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 11 மாதத்தில் கீர்த்தி என்ற பெண் குழந்தை உள்ளது. சந்தியாவுக்கு அடிக்கடி வயிற்று வலி வந்துள்ளது.

இதற்காக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் அவர் குட்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த சந்தியா விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சந்தியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்ெகாலை செய்து கொண்டதால் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News