செய்திகள்
கோப்புபடம்

4 பெண்கள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி

Published On 2021-06-24 20:32 IST   |   Update On 2021-06-24 20:32:00 IST
ஈரோடு மாவட்டத்தில் 4 பெண்கள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 686 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. எனினும் தமிழக அளவில் கொரோனா வைரஸ் பரவலில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, கோவை மாவட்டத்தில் 793 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டத்தில் 686 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 872 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில் கொரோனாவுக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 65 வயது முதியவர் கடந்த மாதம் 20-ந்தேதியும், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது மூதாட்டி கடந்த 17-ந்தேதியும், 70 வயது மற்றும் 65 வயது மூதாட்டிகள் 21-ந்தேதியும், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 59 வயது பெண் நேற்றும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 564 ஆக உயர்ந்தது.

மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,307 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 79 ஆயிரத்து 990 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ள 5 ஆயிரத்து 318 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Similar News