செய்திகள்
கோப்புபடம்

நடுவீரப்பட்டு அருகே வெந்நீர் கொட்டியதில் குழந்தை பலி

Published On 2021-06-24 14:27 GMT   |   Update On 2021-06-24 14:27 GMT
நடுவீரப்பட்டு அருகே வெந்நீர் கொட்டியதில் குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
நெல்லிக்குப்பம்:

நடுவீரப்பட்டு அடுத்த கொடுக்கன்பாலையம் அருகே உள்ள மலையடிகுப்பத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரது மனைவி உமா (வயது 22). இவர்களுக்கு 1 வயதில் ரத்தீஸ் என்கிற மகன் இருந்தான். இந்த நிலையில் சம்பவத்தன்று உமா, ஆவி பிடிப்பதற்காக வெந்நீர் வைத்திருந்தார். பின்னர் அவர் ஆவி பிடித்து விட்டு சுடு தண்ணீரை கீழே வைத்துவிட்டு வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ரத்தீஷ் மீது சுடு தண்ணீர் எதிர்பாராத விதமாக கொட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவன் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உமா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரத்தீசை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ரத்தீஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுடுதண்ணீர் கொட்டியதில் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News