செய்திகள்
சென்னிமலை அருகே சாப்ட்வேர் என்ஜினீயர் விபத்தில் பலி
சென்னிமலை அருகே சாப்ட்வேர் என்ஜினீயர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோடு எல்லக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (41). சாப்ட்வேர் என்ஜினீயர். சம்பவத்தன்று இவர் தனது தோட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பாலதொழுவு ஜம்பமடை என்ற இடத்தில் டிராக்டர் ஒன்று பஞ்சராகி ரோட்டோரம் நின்று கொண்டிருந்தது. அதன்மீது எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்தானது. இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.