செய்திகள்
ஆப்பக்கூடல் அருகே இளம்பெண் தற்கொலை
ஆப்பக்கூடல் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி-கோபி பகுதியை சேர்ந்தவர் பூபாலன், இவரது மனைவி இனியராதா (29). இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகிறது, பிரதீப் (10), சுரேஷ் (4) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த இனியராதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தெரிய வந்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட இனியராதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்ககா அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.