செய்திகள்
கைது

சித்தோடு அருகே காரில் மது கடத்திய வாலிபர் கைது

Published On 2021-06-23 10:04 GMT   |   Update On 2021-06-23 10:04 GMT
சித்தோடு அருகே காரில் மது கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்தோடு:

பவானி லட்சுமி நகர் பகுதியில் சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வாகன சோதனை செய்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அந்த காரில் மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த ஈரோடு வெட்டுகாட்டுவலசு பகுதியை சேர்ந்த விஜய்சூர்யா (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மதுபாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பது தெரிய வந்தது.

Tags:    

Similar News