செய்திகள்
குத்தாலம் அருகே சாராயம் விற்றவர் கைது
குத்தாலம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதிகளில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து குத்தாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது திருமணஞ்சேரி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 44) என்பவர் வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக 110 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்து அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.