செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

மணல்மேடு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2021-06-22 12:35 GMT   |   Update On 2021-06-22 12:35 GMT
மணல்மேடு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல்மேடு:

மணல்மேட்டை அடுத்த வடவஞ்சார் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கலையரசன்( வயது 33). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். மனநிலை பாதிக்கப்பட்டவரான கலையரசன் நேற்று தனது வீட்டின் அருகே இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியில் திடீரென கை வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த மணல்மேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த கலையரசன் உடலை மீட்டனர். இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News