செய்திகள்
தற்கொலை

ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-06-20 12:06 GMT   |   Update On 2021-06-20 12:06 GMT
ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:

சிவகங்கை மாவட்டம் ஆத்திரம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது32). ஆட்டோ டிரைவரான இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று குடும்பத்தகராறு காரணமாக பழனிச்சாமி பி.அழகாபுரியில் உள்ள புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News