செய்திகள்
மாத்தூர் அருகே டிராக்டரில் மணல் கடத்தியவர் கைது
மாத்தூர் அருகே டிராக்டரில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:
மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை கோரையாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்திவயல் கிராமத்தின் அருகே ஆற்றுப்பகுதியில் இருந்து வந்த ஒரு டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் அப்பகுதியில் இருந்து மணல் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒரு யூனிட் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் மணல் கடத்திய சாத்திவயல் கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.