செய்திகள்
அபராதம்

ஊரடங்கை மீறி திறந்த ஜவுளிக்கடைகளுக்கு அபராதம்

Published On 2021-06-20 11:46 GMT   |   Update On 2021-06-20 11:46 GMT
ஊரடங்கை கடைப்பிடிக்காமல் ஜவுளிக்கடைகள் திறந்திருந்ததை கண்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நகரப்பகுதியில் கடைவீதிகளில் கொரோனா ஊரடங்கை மீறி ஜவுளிக்கடைகள் உள்பட அனுமதிக்கப்படாத கடைகள் திறந்திருப்பதாக நகராட்சி நிர்வாகத்தினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்ரமணியன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் பரக்கத் மற்றும் அதிகாரிகள் கடைவீதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊரடங்கை கடைப்பிடிக்காமல் ஜவுளிக்கடைகள் திறந்திருந்ததை கண்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தனர். இதில் 8 ஜவுளிக்கடைகள், 2 செல்போன் கடைகளுக்கு அபராதமாக ரூ.37 ஆயிரம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News