செய்திகள்
நகை பறிப்பு

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு

Published On 2021-06-19 11:53 GMT   |   Update On 2021-06-19 11:53 GMT
பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:

கே.புதுப்பட்டி போலீஸ் சரகம் கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமுத்து. இவருடைய மனைவி மல்லிகா. இவர் வீட்டு முன்புள்ள வராண்டாவில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் மல்லிகாவின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் கே.புதுப்பட்டி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News