செய்திகள்
92 அடியை நெருங்கும் பவானிசாகர் அணை நீர் மட்டம்
பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்காலுக்கு 800 கனஅடியும், ஆற்றில் குடிநீருக்கு 200 கனஅடி என மொத்தம் 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலம்:
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி 6 ஆயிரத்து 829 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
கடந்த 17-ந்தேதி பவானி சாகர் அணையின் நீர் மட்டம் 89.26 அடியாக இருந்தது. நேற்று 90.98 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று காலை 91.96 அடியாக உயர்ந்தது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் விரைவில் நீர்மட்டம் 92 அடியை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்காலுக்கு 800 கனஅடியும், ஆற்றில் குடிநீருக்கு 200 கனஅடி என மொத்தம் 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.