செய்திகள்
கோப்புபடம்

சிதம்பரத்தில் டிப்பர் லாரி மோதி தொழிலாளி பலி - மகனுக்கு தீவிர சிகிச்சை

Published On 2021-06-16 18:31 IST   |   Update On 2021-06-16 18:31:00 IST
சிதம்பரத்தில் டிப்பர் லாரி மோதி தொழிலாளி உயிரிழந்தார்.அவரது மகனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் அருகே உள்ள கீழ புவனகிரி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 42). தொழிலாளி. இவரது மகன் புவனேந்திரன்(18) . நேற்று மாலை இருவரும் மொபட்டில் கீழ புவனகிரியில் இருந்து சிதம்பரம் நோக்கி, வந்து கொண்டிருந்தனர்.

அப்போது வயலூர் அருகே வந்த போது, எதிரே வந்த டிப்பர் லாரி மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த புவனேந்திரன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த திருவள்ளூர் மாவட்டம் தாணிபூண்டி பூலாமேடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த செல்வகுமார் ( 27) என்பவரை கைது செய்தனர்.

Similar News