செய்திகள்
வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் 2 பேர் கைது
வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரையூர்:
காரையூர் அருகே உள்ள ஒலியமங்களம் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் வினோத் (வயது 24). இவர் கடந்த 7-ந்தேதி மோட்டார் சைக்கிளில் கொக்குப்பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது, 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டினர். இதுகுறித்து காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே 3 பேரை கைது செய்தார். இந்நிலையில் நேற்று திருவப்பூர் அம்பாள்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (31), மச்சுவாடி வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த வீரையா (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.