செய்திகள்
கோப்புப்படம்

கொடுமுடி அருகே கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த மருந்து கடைக்கு ‘சீல்’

Published On 2021-06-16 08:59 GMT   |   Update On 2021-06-16 08:59 GMT
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே மருந்து கடையில் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை போல் கொரோனா நோயாளிகளுக்கும் மற்றும் பிற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவது தெரிய வந்தது.
கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெள்ளோட்டம்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட நடுப்பாளையம் என்ற கிராமத்தில் ஒரு மருந்து கடை செயல்பட்டு வருகிறது. இங்கு டாக்டர் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் ஊசி போடுவதாக தாசில்தார் அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதையடுத்து கொடுமுடி தாசில்தார் ஸ்ரீதர், மண்டல துணை தாசில்தார் பரமசிவம், நில வருவாய் ஆய்வாளர் தங்கமணி, புஞ்சைகொளாநல்லி ஆரம்ப சுகாதார மருத்துவர் சோமசுந்தரம், சுகாதார ஆய்வாளர் தங்கவேல் மற்றும் வெள்ளோட்டம் பரப்பு பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிதாஸ், மலையம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மன்சூர்அலி ஆகியோர் சம்பந்தப்பட்ட மருந்து கடைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது மருந்து கடையில் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை போல் கொரோனா நோயாளிகளுக்கும் மற்றும் பிற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த மருந்து கடைக்கு சீல் வைத்தனர்.

Tags:    

Similar News