செய்திகள்
கைது

புஞ்சைபுளியம்பட்டி அருகே கள்ளசாரயம் காய்ச்சிய நபர் கைது

Published On 2021-06-15 10:44 GMT   |   Update On 2021-06-15 10:44 GMT
புஞ்சைபுளியம்பட்டி அருகே கள்ளசாரயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புஞ்சைபுளியம்பட்டி:

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மாராயிபாளையம் பழத் தோட்ட பகுதியில் கள்ள சாராயம் காய்சுவதாக புஞ்சைபுளியம்பட்டி தனி பிரிவு போலீஸ் சதாசிவத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் மது விலக்கு இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் தலைமையிலான போலீசார் சோதனையிட்ட போது கள்ள சாராயம் காய்சுவதற்காக ஒரு பேரலில் 50 லிட்டர் ஊறல் போட்டு வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.

மேலும் அப்பகுதியில் கள்ள சாராயம் காய்சி விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடித்தனர். இதனையடுத்து போலீசார் விசாரனையில் கனக்கரசம் பாளையத்தை சேர்ந்த காளிமுத்து (26) என்பவர் கள்ள சாராயம் காய்சி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது காளிமுத்துவை கைது செய்த மது விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News