செய்திகள்
குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை
திருமணமாகி 8 மாதங்களே ஆனதால், பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அருகே செவிலிமேட்டை சேர்ந்தவர் தினேஷ் பாபு. இவரது மனைவி வெண்ணிலா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆன நிலையில், குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் வெண்ணிலா இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை மற்றும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு இறந்து கிடந்த வெண்ணிலா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், திருமணமாகி 8 மாதங்களே ஆனதால், பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமி விசாரணை மேற்கொண்டு வருகிறார். விசாரணை பிறகே இளம்பெண் வெண்ணிலாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
காஞ்சீபுரம் அருகே செவிலிமேட்டை சேர்ந்தவர் தினேஷ் பாபு. இவரது மனைவி வெண்ணிலா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆன நிலையில், குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் வெண்ணிலா இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை மற்றும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு இறந்து கிடந்த வெண்ணிலா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், திருமணமாகி 8 மாதங்களே ஆனதால், பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து காஞ்சீபுரம் வருவாய் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமி விசாரணை மேற்கொண்டு வருகிறார். விசாரணை பிறகே இளம்பெண் வெண்ணிலாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.