செய்திகள்
கோப்புபடம்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை - 2 பேர் கைது

Published On 2021-06-14 22:01 IST   |   Update On 2021-06-14 22:01:00 IST
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே கடவாசல் கிராமம் காந்திநகரை சேர்ந்த ராமசாமி மகள் தீபா (வயது 25). இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தீபா, தண்ணீர் பிடிப்பதற்கு வீட்டின் அருகே உள்ள குடிநீர் குழாய்க்கு சென்றார்.

அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகியோர் இருவரும் தீபாவிடம் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பாமா மற்றும் பிரபுதாஸ் ஆகியோர் தீபாவை திருமணம் நிச்சயித்த மாப்பிள்ளையிடம் தவறாக கூறி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதில் மனமுடைந்த தீபா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தீபாவின் தாய் கலாவதி (50) கொடுத்த புகாரின்பேரில் புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக பாமா(25), பிரபுதாஸ் (37) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தற்கொலை செய்து கொண்ட தீபாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Similar News