செய்திகள்
கைது

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்- வாலிபர் கைது

Published On 2021-06-13 11:32 GMT   |   Update On 2021-06-13 11:32 GMT
மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:

கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் திருமணஞ்சேரி, முள்ளங்குறிச்சி காட்டாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து டிராக்டர் டிரைவர் குமரன் (வயது 32) என்பவரை கைது செய்த போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News